Homeசெய்திகள்அரசியல்நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலை

நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலை

-

நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலை

ஒரே நாடு ஒரே தேர்தலை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்"- அண்ணாமலை பேட்டி!
Photo: ANI

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நிறைய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். சுயநலவாதிகள் அல்லது குடும்ப ஆட்சி செய்பவர்கள் அல்லது ஊழல் செய்பவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாக செலவினங்களை குறைப்பது மட்டுமல்ல. பத்திரிக்கையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் தான். ஒரே நாடு ஒரே தேர்தலை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக வரவேற்கிறோம்.

சோனியா காந்தியின் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டணி. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருப்பவர்கள் தான் இந்தியா கூட்டணியில் முன்னிலையில் நிற்கிறார்கள். நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம், சீமானின் சவாலுக்கு தயார்” என்றார்.

MUST READ