Homeசெய்திகள்அரசியல்அசிங்கம் எனக்கா..? ஆஜராக முடியாது… என்ன செய்வீர்கள்..? அடங்காத சீமான்..!

அசிங்கம் எனக்கா..? ஆஜராக முடியாது… என்ன செய்வீர்கள்..? அடங்காத சீமான்..!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் தலை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் காவலாளி, உதவியாளரை போலீசார் அழைத்து சென்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.

இதுகுறித்து ஓசூரில் பேட்டியளித்த அவர், ”என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இதுபோன்ற எந்த அவசரத்தையும் போலீசார் காட்டவில்லையே… ஏன்? போலீசார் அனுப்பிய சம்மனால் எனக்கு அசிங்கமில்லை. திமுக அரசுக்குத்தான் அசிங்கம். பெட்ரோல் குண்டு வீசப்படும் என அச்சுறுத்தல் இருந்ததால் எனது வீட்டின் காவலாளி துப்பாக்கி வைத்திருந்தார்.பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது, என்ன செய்வீர்கள்?” என போலீஸாருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட அவரின் உதவியாளர் சுபாகர் நாயுடு, காவலாளி அமல்ராஜிடம் நீலாங்கரை காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் வீட்டில் இல்லாததால், ‘ சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்” என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார். இந்நிலையில், வளசரவாக்கம், நீலாங்கரையில் உள்ள சீமானின் வளசரவாக்கம் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை போலீஸார் முன்பே உதவியாளர் சுபாகர் கிழித்து எறிந்தார்.

இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு வந்து காவல்துறை ஆய்வாளார், கேட்டைத் திரந்து உள்ளே சென்று காவலாளி அமர்ல்ராஜை கைது செய்ய முயன்றார். அப்போது போலீஸாருக்கும், காவலாளி அமல்ராஜுக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டது. இதனையடுத்து உதவியாளர் அமல்ராஜை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். அப்போது காவலாளி அமல்ராஜ் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து பற்றினர்.

அப்போது அங்கே வந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு காவலாளி அமல்ராஜை அழைத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து மிரண்டு போன கயல்விழி, காவல்துறை ஆய்வாளரிடம், ”நான் சாரி கேட்டுக்கிறேன். ப்ளீஸ்… ப்ளீஸ்…” எனக் கெஞ்சினார். அதற்கு கோபத்துடன் காவல்துறை ஆய்வாளர், கோபமாக ”என்னா சாரி..?’ என சொல்லி விட்டுச் சென்றார்.

தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏற்பட்டு சுமார் 15 நிமிட போராட்டங்களுக்குப் பிறகு காவலாளி அமல்ராஜை போலீஸார் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதேபோல், வளசரவாக்கத்தில் சம்மனை கிழித்த சுபாகரையும் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்துள்ளனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, ” காவலாளி அமல்ராஜ் தவறேதும் செய்யவில்லை.

காவல்துறையினர் அத்துமீறி வீட்டுக்குள்ளே நுழைந்ததை அவர் தடுத்ததாகவும், காவல்துறையினர்தான் காவலாளியை தாக்கியதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நீலாங்கரை காவல் நிலையத்தின் முன் சீமான் தரப்பின் வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர்.

MUST READ