spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் -  விஜய்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் -  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும். எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

we-r-hiring

 

கன்னியாகுமரி மாவட்டம் மழை கடல் ஆறுகள் அருவிகள் வழிபாட்டுத்தலங்கள் என இயற்கை அழகு நிறைந்து காணப்பட்ட போதிலும் இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் உலக புகழ் வாய்ந்த விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்ற  இடங்கள் இங்கு இருந்த போதிலும் புதிய சாலை வசதிகள் ரயில் வசதிகள் மற்றும் விமான நிலையம் இல்லாத காரணத்தால் மிகவும் ஆற்றல் வளம் மிக்க கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் துறையில் போதிய வளர்ச்சியை எட்ட வில்லை.

அதானி ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் – மின்வாரியஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? – டாக்டர் அன்புமணி இராமதாஸ் 

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதில் அதிக கவனம் செலுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தை உலக சுற்றுலா தலங்களின் வரைபடத்தில் கொண்டு  சேர்க்க போதிய நிதியினை ஒதுக்க வேண்டும்.

இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியாவின் சுற்றுலாவையும் மேம்படுத்த உதவும் என்பதை கூறிகொள்கிறேன்.

MUST READ