Homeசெய்திகள்அரசியல்"நடராஜ் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“நடராஜ் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

காவல்துறை முன்னாள் தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க. ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒரு சில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் மந்திரிகள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணையக் குழு முன்னாள் தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது, இந்த தி.மு.க. அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது.

பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்கள் கைது

காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ