spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சீனாவிடம் கையேந்த வைக்கும் வறுமை: டிராகனின் வலையில் வசமாக சிக்கும் பாகிஸ்தான்

சீனாவிடம் கையேந்த வைக்கும் வறுமை: டிராகனின் வலையில் வசமாக சிக்கும் பாகிஸ்தான்

-

- Advertisement -

வறுமையில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவி கோரி மீண்டும் சீனாவின் வீட்டு வாசலை தட்டியுள்ளது. 10 பில்லியன் யுவான் ($1.4 பில்லியன் அல்லது 117.70 பில்லியன் இந்திய ரூபாய்) கூடுதல் கடனாக வழங்குமாறு சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ஊடகமான ட்ரிப்யூன் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப், வாஷிங்டனில் சீனாவின் நிதியமைச்சர் லியானோ மினைச் சந்தித்து, நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் வரம்பை 40 பில்லியன் யுவானாக உயர்த்துமாறு சீனத் தரப்பிடம் கோரிக்கை வைத்தார்.

we-r-hiring

சீனா இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், மொத்த வசதி சுமார் 5.7 பில்லியன் டாலர்களாக இருக்கும். 30 பில்லியன் யுவான் ($4.7 பில்லியன்) மதிப்புள்ள சீன வர்த்தக வசதியை பாகிஸ்தான் தனது கடனை திருப்பிச் செலுத்த ஏற்கனவே பயன்படுத்தியுள்ளது. இப்போது இந்த வசதியை கூடுதலாக 10 பில்லியன் யுவான் ($1.4 பில்லியன்) அதிகரிக்க விரும்புகிறது. தற்போதுள்ள $4.3 பில்லியன் வசதி பாகிஸ்தானிய மத்திய வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான்’ இன் அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாகும், இது சுமார் $11 பில்லியன் ஆகும்.

பாகிஸ்தான் இப்படி கோரிக்கை வைப்பது இது முதல் முறையல்ல. பணத் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் அந்நாடு, கடன் வரம்பை அதிகரிக்கக் கோரியும் முன்பு கோரிக்கை வைத்தது, ஆனால் சீனா அத்தகைய முறையீடுகளை நிராகரித்தது. 4.3 பில்லியன் டாலர் வசதியை நீட்டித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்த புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 2027 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், சீனப் பிரதமர் லீ கியாங்கின் சமீபத்திய பயணத்தின் போது இந்த நீட்டிப்பு முறைப்படுத்தப்பட்டது.

புதிய கோரிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்களை பாகிஸ்தானின் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் தற்போதுள்ள சில கடன்களை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக கூடுதல் நிதி உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை மேம்படுத்துவதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் மற்றும் பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா ஆகிய இருதரப்பு நாணய ஒழுங்குமுறை ஒப்பந்தத்தில் டிசம்பர் 2011 இல் கையெழுத்திட்டன.

MUST READ