spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

-

- Advertisement -

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சிறப்பு புலனாய்வு படை நள்ளிரவில் அதிரடியாக சோதனை செய்து பல முக்கிய சாட்சியங்களை கைப்பற்றினர்.

we-r-hiring

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்குகளை சிறப்பு புலனாய்வு படை விசாரித்து வருகிறது. பிரஜ்வல் தன்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று ஒரு பெண் புகார் அளித்தது மட்டுமில்லாமல் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கற்பழிப்பு இந்திய தண்டனைச் சட்டம் 376 கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிறப்பு புலனாய்வு படையினர் அதிரடியாக பெங்களூரு பசவங்குடி பகுதியில் உள்ள பிரஜ்வல் வீட்டிலும் ஹாசன் மாவட்டம் ஹொலே நரசிபுரா பகுதியில் உள்ள ரேவண்ணா வீட்டிலும் ஹாசன் மாவட்டம் படுவல்லா இத்தே என்ற பகுதியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

மூன்று தனிப்படைகள் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் அதிரடியாக சோதனை செய்த நிலையில் அந்தந்த வீடுகளிலிருந்து பல முக்கிய சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

https://www.apcnewstamil.com/news/chennai/laser-light-on-landing-at-chennai-airport/82633

பிரஜ்வல் ரேவண்ணா மீது பிணையில் வர முடியாத பாலியல் வழக்கு பதிவாகியுள்ள நிலையில் அவர் எப்பொழுது இந்தியா திரும்பினாலும் உடனடியாக கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் அவரை கைது செய்ய தனி படை ஜெர்மனி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ