- Advertisement -
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்.


சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பினால் பாய் தலையனையோடு போய்விடுவார். பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரை தட்டி தட்டி எழுப்ப வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்றவரை தேர்வு செய்து விடாதீர்கள். ஏற்கனவே இரண்டு முறை அவரை தேர்வு செய்து விட்டீர்கள். எந்த பலனையும் நீங்கள் அனுபவிக்கவில்லை. அதனால் ஆட்டத்தில் இருந்து அவரை விலக்கி விடுங்கள்.

அவர்களிடம் இரண்டு இலை உள்ளது. எங்களிடம் இரண்டு கரும்பு உள்ளது. இலையை ஆடு தான் திங்க முடியும் நாம் திங்க முடியாது என்று பேசி வாக்காளர்கள் கவர்ந்தார் சீமான்.
