- Advertisement -
நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் சேர வேண்டும் -சிவகாசியில் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் போற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதால் கிடைக்கும் 30 வினாடி விளம்பரத்திற்காக சீமானும், அண்ணாமலையும் செய்யும் அரசியல் தமிழக மக்களுக்கு மிகவும் போர் அடித்துவிட்டது.
வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும். தொடர்ந்து பாஜகவின் கொள்கைக்காக சீமான் துணை நிற்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
பாஜக தமிழகத்தில் காலூன்ற சமூக நீதி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த சீமான் துணை நிற்பது சீமான் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார்.