பேரிடர் நிதி , நெடுஞ்சாலை மற்றும் ரயில் வழித்தடம் விரிவாக்கம் என டெல்லியில் பட்ஜெட்டிக்கு முந்தைய கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கைகள் வைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், துணை செயலாளர் பிரதீக் தயாள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அதில் , 2021 – 22 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியை 63,246 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம், திட்ட முதலீடு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருப்பினும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் அத்துடன் இந்த திட்டத்திற்கான புதிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டு பேரும் இயற்கை பேரிடர்கள் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு பிரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும் பேரிடர் நிவாரண நிதியாக 37,906 கோடி ரூபாயை மாநில அரசு கோரி இருந்த நிலையில், மத்திய அரசு மிகக் குறைவாக 276 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்துள்ளது.
இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய நியாயமான தொகையாக பார்க்கப்படும் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்,வரையறுக்கும் வரவு செலவு திட்டத்தின் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரழிவு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசுக்கு 3000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசு 30.06.2022 அன்று சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டினை நிறுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது.எனவே மாநிலங்களின் வரிப் பகிர்வில் நியாயமான பங்கே பெருவகையில், வரி விதிப்புக்கான அடிப்படை வீதங்களில் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை இணைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது .
பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் இன்றைய செலவினர்களின் அடிப்படையில் தற்போது மனதாக இல்லாததால் திட்ட செலவினங்களில் பெரும் பகுதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக,
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் , வீடு ஒன்றுக்கு 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது மத்திய அரசு, அதே நேரம் தமிழ்நாடு அரசு வீடு ஒன்றுக்கு 12 முதல் 14 லட்சம் ரூபாய் வரை பங்களிப்பாக வழங்குகிறது.
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிராமப்புறங்களில் வீடு ஒன்றுக்கு 0.72 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில் மாநில அரசு 1.68 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
* தேசிய சமூகநீதி உதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதம்தோறும் 200 ரூபாய் மற்றும் ஒவ்வொரு விதவைகள் மற்றும் மாற்றித் திறனாளி பயனாளிகளுக்கு மாதம் 300 ரூபாய் பங்களிப்பாக வழங்குகிறது, இந்தத் தொகை போதுமானதாக இல்லாததால் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடு அரசும் இத்தொகையை உயர்த்தி ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதம்தோறும் ஓய்வூதியமாக 1200 ரூபாய் வழங்குகிறது.
எனவே தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு தங்களது பங்களிப்பு தொகையை அதிகரித்து குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் பெறும் நிகர கடன் உச்சவரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காடாக மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு கணக்கிடப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து குறைந்த மதிப்பிடப்படுவதால் , கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 8,500 அளவில் கடன் பெறுவது குறைவு ஏற்பட்டுள்ளது.அடுத்த வரும் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில் மத்திய அரசு பொருத்தமான மாற்றங்களை செய்வது நியாயமானது என்று கருதப்படுவதால் இந்த பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெரிய அளவிலான ஒரு கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை பொறுத்தவரை தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பார்மையோடு நடத்தி வருகிறது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதிய ரயில்வே தடங்களை அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. வர இருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் , தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையே 4 வது இரும்பு பாதை வழித்தடம், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி – ஓசூர் புதிய இரும்பு பாதை வழித்தடம், அருப்புக்கோட்டை வழியாக மதுரை- தூத்துக்குடி ( 143.5 கீ.மி), மீஞ்சூர் -திருவள்ளூர் – ஸ்ரீ பெரம்பத்தூர்- ஒரகடம்- சிங்க பெருமாள் கோவில்- மதுராந்தகம், சேலம்- ஓசூர்- பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர்- எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை -சேலம் கோயம்புத்தூர் ஆகிய இடங்களை இணைக்கும் மிக அதிவேக ரயில் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையேயான உயர்மட்ட சாலை மற்றும் செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் வரையிலான உயர்மட்ட சாலை அமைப்பு திட்டத்தை முன்னுரிமையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
2005 ஆம் ஆண்டு சென்னை கன்னியாகுமரி வழித்தட திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 4 வழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது போக்குவரத்து வாகனங்கள் பன்மடங்கு அதிகரித்து சாலை விபத்துக்களால் கடுமையாக பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய புதிய திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.