சீமானை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறது காவல்துறை. அவர் ஆஜராகாததால், சம்மனை பெற்றுக் கொள்ளாததால் அவரது வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு சென்றனர் காவல்துறையினர். அதனை கிழித்து எறிந்ததால் சீமான் வீட்டு காவலாளியையும், உதயவியாளரையும் கைது செய்துள்ளது காவ்லதுறை. இந்நிலையில் நான் ஆஜராக முடியாது என போலீஸாருக்கு சவால் விடுத்துள்ளார் சீமான்.

இந்நிலையில் சீமானால் ஏமாற்றப்பட்டதாக வழக்குத் தொடுத்துள்ள விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், ”இன்றைக்கு நடந்த பிரஸ்மீட்டில் விஜயலட்சுமியை திமுகவினர் கூட்டி வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். என் மேல் வழக்கு கொடுப்பதற்காக அவர்கள் கூட்டி வந்திருக்கிறார்கள் என்கிறீர்கள். சீமான் அவர்களே முதல்ல என்ன சொன்னீங்க? எனக்கு விஜயலட்சுமி யார் என்று தெரியாது என்று சொன்னீங்க. காங்கிரஸ்காரர்கள் கூட்டி வந்திருப்பதாக சொன்னீர்கள்.
அடுத்ததாக வழக்கு கொடுக்கும்போது விஜயலட்சுமியை பாரதிய ஜனதா கூட்டி வந்திருப்பதாக சொன்னீர்கள்.நீங்க மதுரை செல்வத்தை வைத்து 2023 ஒரு பேச்சு வார்த்தைக்கு என்னிடம் வந்தீர்கள் இல்லையா? அப்போது ஐம்பதாயிரம் மாசம் கொடுத்து விடுகிறேன். என்னை பற்றி எங்கு பேசாதே என்று சொல்லிவிட்டு மாதாமாதம் ஐம்பதாயிரம் போட்டு விட்டீர்கள். என்னிடம் இருந்து வீடியோக்களை எல்லாம் வாங்கினீர்கள்.
அப்புறம் மதுரை செல்லும் உங்க வீட்டுக்காரரிடம் பேசுவதற்கு யாரிடம் கேட்க வேண்டும் எனக் கேட்டார். வாக்குமூலம் எல்லாம் கொடுத்திருந்தார். அப்புறம் உங்கள் பொன்னான வாயில் இருந்து தானே பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி என வீடியோவில் எல்லாம் சொன்னீர்கள். அந்த வீடியோக்களை எல்லாம் காவல்துறையிடம் கொடுத்து, காவல்துறை எடுத்து போய் நீதிமன்றத்தில் கொடுத்து, அதையெல்லாம் பார்த்துதான் விஜயலட்சுமி உங்கள் முதல் மனைவியா? என்று கேட்டிருக்கிறார்கள்.
இப்போது அந்த பொம்பளையை கொஞ்சம் நேரில் வரச் சொல்லுங்கள் நான் உட்கார்ந்து பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன் சீமான் அவர்களே. உங்களை நேரில் பார்க்கும்போது, ”என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது?” அப்படின்னு கேட்க வேண்டும் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் காத்திருக்க சொல்லுங்கள் உடனே அது கரைந்து போய்விடும். ஏமாற்றாதீர்கள் சீமான் அவர்களே… என்னோட பாவத்தை கட்டிக்காதீங்க.
ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆட்களை அனுப்பி விட்டு இன்னைக்கு அப்படியே பிரஸ்கிட்ட வந்து அந்த பொம்பள இப்படி… அவ அப்படினு சொல்றீங்க. இன்னிக்கு கூட துரோகம் பண்ணுகிறீர்கள். அதுதான் நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்னோட பாவம் உங்களை சும்மாவே விடாது” எனத் தெரிவித்துள்ளார்.