spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபெர்த் டெஸ்ட்: திணறும் ஆஸ்திரேலியா: வெற்றியை நோக்கி இந்திய அணி

பெர்த் டெஸ்ட்: திணறும் ஆஸ்திரேலியா: வெற்றியை நோக்கி இந்திய அணி

-

- Advertisement -

வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க திருப்பத்தைப்பெறும் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இது புதிய டீம் இந்தியா.


இதற்கு முன் பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்கள் இல்லாத இந்திய அணி பல அதிசயங்களை நிகழ்த்தும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பெர்த்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. ஜஸ்பிரித் பும்ராவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுலின் பார்ட்னர்ஷிப்பில் 172 ரன்களை குவித்து 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

we-r-hiring

அதிரடி கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவின் 5 விக்கெட்டுகளின் அடிப்படையில், இந்தியா முதலில் ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குள் சுருட்டியது. 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் போல்டாக பேட்டிங் செய்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவின் ஸ்கோரை 172/0க்கு உயர்த்தினர். ராகுல் 153 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

முதல் இன்னிங்சில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்த ராகுலும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் அபார முதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ஆரம்பத்தில் இருவரும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் கிரீஸில் தாக்குப்பிடித்தவுடன் இறங்கி அடித்தனர். முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் 225 ரன்களுக்கு 46 ரன்கள் முன்னிலை பெற்றதில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இப்போது ராகுலும், யஷஸ்வியும் இணைந்து ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் மிகப்பெரிய தொடக்க பார்ட்னர்ஷிப்பின் சாதனையை படைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தொடக்க ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடித்தது இதுவே முதல்முறை.

 

MUST READ