Homeசெய்திகள்விளையாட்டுலக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட்  தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 27 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 28வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள 28வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 4 போட்டியில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி மூன்றையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியடைந்ததுள்ளதால் இந்த போட்டியில் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுலும் குயிண்டன் டிகாக்கும் களமிறங்கவுள்ளனர்.

MUST READ