Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பந்த் புதிய சாதனை!

ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பந்த் புதிய சாதனை!

-

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலப்பட்டியலில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்க ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏலத்தில் முதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில்  அதிகபட்சமாக ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கு  பஞ்சாப் அணியில் ஏலம்  போனார்.

இவர்கள் தவிர்த்து தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா ரூ.10.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இங்கிலாந்து அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். முகமது ஷமி-ஐ ரூ.10 கோடிக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வாங்கியது.

தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை, ரூ.7.5 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கிது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ரூ.12.25 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்-ஐ ரூ.11.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. சுழற்பந்து வீச்சாளர் சாகல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

MUST READ