spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணியை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத் அணி!

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத் அணி!

-

- Advertisement -

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

we-r-hiring

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதலாவது தகுதி சுற்று கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூருvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான்VSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 34 ரன்களிலும் அபிஷேக் ஷர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 37 ரன்களிலும் ஏய்டன் மார்க்ராம் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 175 ரன்கள் எடுத்தது.

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டாம் கோலர் காட்மோர் 10 ரன்களிலும் யாஷ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும் ரியான் பராக் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக துருவ் ஜீரல் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் சபாஷ் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாளை நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது.

MUST READ