spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் டி-20  உலகக்கோப்பை: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரம்

மகளிர் டி-20  உலகக்கோப்பை: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரம்

-

- Advertisement -

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம்  தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

we-r-hiring

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 28 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 32 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாத்திமா சனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

MUST READ