spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇரவோடு இரவாக அகற்றப்பட்ட லட்சுமி யானை சிலை! போலீசார் அதிரடி

இரவோடு இரவாக அகற்றப்பட்ட லட்சுமி யானை சிலை! போலீசார் அதிரடி

-

- Advertisement -

புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை, நள்ளிரவு போலீசார் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவோடு இரவாக அகற்றப்பட்ட லட்சுமி யானை சிலை! போலீசார் அதிரடி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி அருகே நடைபயற்சி சென்ற போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அங்கு திடீரென 4 அடி உயரத்தில் யானையின் கற்சிலையை, வழக்கறிஞர் ராம்முனுசாமி வைத்தார். அந்த சிலைக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வந்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அனுமதியின்றி இங்கு சிலை வைக்கக்கூடாது என்றும் அதனை அகற்றுமாறும் உத்தரவிட்டனர். ஆனால் சிலையை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிலையை அகற்ற காலக்கெடு கொடுத்து விட்டு சென்றனர்.

we-r-hiring
புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை, நள்ளிரவு போலீசார் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீ ரெட்டி தலைமையில் போலீசார் இன்று நள்ளிரவு, லட்சுமி யானையின் சிலையை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஏற்கனவே கூறியபடியே சிலை அகற்றப்படுகிறது என்று போலீசார் கூறினர். இதை பொதுமக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பொதுமக்களை வலுகட்டாயமாக தள்ளி விட்டு போலீசார் கலைத்தனர். பின்பு போலீசார், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அப்புறப்படுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ