Homeசெய்திகள்தமிழ்நாடுவேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்!

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தனது வேட்பு மனுதாக்கலை மாவட்ட தேர்தல் ஆணையரிடம் வழங்கினார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கான படிவத்தை மாவட்ட தேர்தல் ஆணையர் சுப்புலட்சுமியிடம் வழங்கினார். இதில் நிர்வளத்துறை அமைச்சரும், அவருடைய தந்தையான துரை முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர். இவரை எதிர்த்து வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். கடந்த முறை மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ