- Advertisement -

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வணிகர்கள், பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது குறித்து செய்தி வெளியான நிலையில், இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசால் அச்சடிக்கப்பட்ட 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும். இதனை வாங்க மறுத்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!
எனவே, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர்கள், கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.