spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார் - மகளிர் ஆணைய தலைவர்..

4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார் – மகளிர் ஆணைய தலைவர்..

-

- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

கலாஷேத்ரா மாணவர்கள்

we-r-hiring

இந்த விகாரம் தொடர்பாக டிஜிபி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ராகல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “விடுப்பில் இருந்த சில மாணவிகளிடம் வீடியோ காலில் பேசியதாகவும், அவர்களின் கருத்துக்களை அறிக்கையாக அரசிடம் வழங்குவேன். மாணவிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலாஷேத்ரா விவாகரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளனர். ” என்று கூறினார்.

MUST READ