spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

-

- Advertisement -

கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் துவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

death

கும்பகோணம் கர்ண கொள்ளை தெருவை சேர்ந்த சௌந்தர் கட்டட வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக சௌந்தர் வீட்டிற்கு செல்லாமல் கும்பகோணம் காவிரி ஆற்றுப் படித்துறையில் மது அருந்தியவாறு இருந்துள்ளார். இன்று காலை கும்பகோணம் காவிரி ஆற்றுப் படித்தறையில் இறந்த நிலையில் சௌந்தரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதே நேரத்தில், நேற்று மதியத்திலிருந்து சௌந்தர் மற்றும் அவரது நண்பர் பாலகுரு ஆகிய இருவரும் கும்பகோணம் சர்க்கரை படித்துறையில் தொடர்ந்து மது அருந்தி உள்ளனர். ஒரு காலகட்டத்தில் போதை ஏறாததால் சானிடைசரில் மாத்திரைகளை கலந்து குடித்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை பாலகுருவும் அதே சர்க்கரைப் படித்துறையில் மற்றொரு பகுதியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இறந்த பாலகுரு கையில் ஓமிப்பர்சோல் என்ற மாத்திரை இருந்துள்ளது.

இந்த மாத்திரை வயிற்று வலி வராமல் தடுக்க கூடியது எனக் கூறப்படுகிறது.அளவுக்கு அதிகமாக மது குடித்து வருவதால் இந்த மாத்திரையை சாப்பிட்டு விட்டு மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இறந்த இருவரது உடல்களும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ