- Advertisement -
புதுக்கோட்டையில் 5 பேருக்கும், கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு பாதிப்பு
புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீப நாட்களாக பருவ கால காய்ச்சல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 26 நபர்கள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூன்று நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக புதுச்சேரியில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.