மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.
குறித்து மாணவர்களுடன் கலந்துரை செய்த போது தங்கள் பள்ளியில் ரைட் சகோதரர் அவர்களைப் பற்றிய பாடம் நடத்திய தலைமையாசிரியர் தங்களின் ஆசையில் குறித்து கேட்டார் அதில் தாங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எங்கள அழைச்சிட்டு போக முடியுமா என்று கேட்டுள்ளனர் அதனைத் தொடர்ந்து கொண்டனூர் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சமூக சேவையின் உதவியுடன் 20 மாணவர்களுக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
அவர்களின் சாத்தியமில்லாத கனவை சாத்தியப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார், அவர்கள் சென்னையில் இன்று அறிவியல் தொடர்பாக பிரில்லா கேளரங்கம் 3d மையம், மெரினா பீச்சில் தலைவர்களின் சமாதிகள்,தலைமைச் செயலகம் வள்ளுவர் கோட்டம்,வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களை மாணவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கவும் பின்பு இரவு ரயில் மூலம் புறப்பட்டு தென்காசி செல்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..