Homeசெய்திகள்தமிழ்நாடுநாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசா

நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது, காரணம் திராவிட மாடல் ஆட்சி என நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

ஆ ராசா

நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பாக இன்று பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆ.ராசா, “ பாராளுமன்றத்தில் திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு பாஜக நடுங்குகிறது. குறிப்பாக என் பெயரை கேட்டால் பாஜகவினர் நடுங்குகிறது. இதற்கு காரணம் அண்ணா முதல் முன்னாள் முதல்வர் கலைஞர் வகுத்த அரசியல் காரணம். குறிப்பாக இந்திய பிரதமர் மோடி 50,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியதாக கூறி மக்களை ஏமாற்றுகிறது. இன்றுவரை இந்தியா முழுவதும் மின்சாரம் அனைத்து வீட்டிற்கு வந்தது காரணம் முன்னாள் முதல்வர் கலைஞர். இந்தியா கூட்டணி என்பது ஒட்டுமொத்த மோடியை வீட்டிற்குள் அனுப்புவதற்காக தயாராக உள்ளது, அதற்கு முதல் தலைவராக உள்ளவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்” என்றார்.

MUST READ