- Advertisement -
பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞர்!
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நேரத்தில் இரவு நேரம் என்பதாலும், கடைகள் மூடப்படுவதாலும் , பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த காதல் ஜோடி அங்குள்ள கழிவறை பின்புறமாக சென்று யாரும் இல்லாததை அறிந்து அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய அழைத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்து நிலையத்தில் யாரும் இல்லாத இடத்தில் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியி யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என அங்குள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.