பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு தொடர்பாக, நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷை விசாரிக்க சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், துபாயில் இருந்த ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 10- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகியுள்ளார்.
அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நடிகர் கமல்ஹாசன்!
ஆருத்ரா நிறுவனத்தின் முகவராகப் பணியாற்றிய ரூசோவிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணப் பரிவர்த்தனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.