Homeசெய்திகள்தமிழ்நாடுஓபிஎஸ்க்கு மானம் இருந்தால் அதிமுக கொடி, வேட்டியை பயன்படுத்தக்கூடாது- ஜெயக்குமார்

ஓபிஎஸ்க்கு மானம் இருந்தால் அதிமுக கொடி, வேட்டியை பயன்படுத்தக்கூடாது- ஜெயக்குமார்

-

ஓபிஎஸ்க்கு மானம் இருந்தால் அதிமுக கொடி, வேட்டியை பயன்படுத்தக்கூடாது- ஜெயக்குமார்

ஓ.பி.எஸ் கோஷ்டிக்கு மானம் இருந்தால், அதிமுக கொடி, அதிமுக கரை வேட்டி மற்றும் கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எடப்பாடி பழனிசாமி சொன்னது போல உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது. தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களால் குட்டு வாங்கிய ஓ.பி.எஸ் கோஷ்டிக்கு மானம் இருந்தால், அதிமுக கொடி, அதிமுக கரை வேட்டி மற்றும் கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது. 2 ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு, தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் தற்போது நாடகமாடுகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் கண்களில் இருந்து தண்ணீரே வரவில்லை. கண்ணீரே வராமல் கண்ணீர் விட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும். எங்களின் கொள்கை, கோட்பாடு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லாது என்பதுதான்” என்றார்.

MUST READ