spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 3 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை – மேலும் 3 பேர் கைது

-

- Advertisement -

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 18 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகிலன் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ