spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழகத்தில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

‘தமிழகத்தில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

we-r-hiring

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இணையதொடர் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோஷப்

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்; குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்த அவசர கதியில் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பல வகையான மொழி, இன, மதம், வாழ்விட சூழல் கொண்ட மக்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்த்து வருகின்றனர்.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் சட்டத்தால் எந்த நன்மையையும் இல்லை. தேர்தல் அரசியலுக்காக சி.ஏ.ஏ. தற்போது அமல்படுத்தப்படுகிறதோ என கருத வேண்டியுள்ளது. இந்திய திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது.இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது.

அனைவரும் பைத்தியம்… கடுப்பான இயக்குநர் கிருத்திகா உதயநிதி…

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிரான 2021- ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ