சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“டாஸ்மாக் பார் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நாளை (டிச.12) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் டிசம்பர் 13- ஆம் தேதி முதல் டிசம்பர் 17- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மீனவர்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை எதுவும் இல்லை. சென்னையில் வரும் 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும்.
தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை!
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். அடுத்த 48 மணி நேரத்தில் நகரில் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.