spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை இன்று முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை இன்று முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்

-

- Advertisement -

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி வைக்கிறார்.

we-r-hiring

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.21 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு  அறிவித்தது. இதற்காக அரசு ரூ.250 கோடியை ஒதுக்கி உள்ளது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி- சேலைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகள்

அதன்படி, ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முன் கூட்டியே டோக்கன் வழங்கபட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை இன்று  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

MUST READ