spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை

பாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை

-

- Advertisement -

பாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை

சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

வகுப்பறை: கவிதை நயம்: சோறிட்டு, பாயாசத்தால் சொக்கவைத்தான் அவன்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் – பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பையும், சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு உட்கொண்ட பொழுது பாயாசம் போட்டுள்ளனர்.

we-r-hiring

அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனை பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாப்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைக்கலப்பாகி மோதல் ஏற்பட்டுள்ளது.

பாயாசத்தால்

இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள், சேர் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட வீடியோ சமூக வளைதலத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.

MUST READ