Homeசெய்திகள்தமிழ்நாடுகம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

-

 

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!
Video Crop Image

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனை மருத்துவக் குழுவினர், சங்கரய்யாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் யாரும் சங்கரய்யாவை நேரில் பார்க்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்” என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சங்கரய்யாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

MUST READ