!["பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/mks6666-1.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் நேற்று (ஜூன் 01) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (வயது 50), சதீஷ்குமார் (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
“பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா (வயது 45), மோகனா (வயது 38), மணிமேகலா (வயது 36), மகேஸ்வரி (வயது 32), பிரபாகரன் (வயது 31) மற்றும் பிருந்தா (வயது 38) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
ஆடல், பாடல் நிகழ்ச்சி- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 6 பேருக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.