- Advertisement -
சீனப் பெண்ணை கரம் பிடித்தார் கடலூர் இளைஞர்
கடலூர் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சீனப் பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யிஜியாவோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தள மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
மணமகன் பாலச்சந்தர் தமிழர் முறைப்படி மணமகளான சீன நாட்டை சேர்ந்த யிஜியாவோ அவருக்கு தாலி கட்டினார்.