Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் அனைத்துக் கோவில் சொத்துகள் மற்றும் குத்தகைதாரர்கள் விவரங்களை 3 மாதங்களில் வெளியிட வேண்டும்:...

தமிழகம் முழுவதும் அனைத்துக் கோவில் சொத்துகள் மற்றும் குத்தகைதாரர்கள் விவரங்களை 3 மாதங்களில் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் குத்தகைதாரர்களின் விவரங்களை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனைத்துக் கோவில் சொத்துகள் மற்றும் குத்தகைதாரர்கள் விவரங்களை 3 மாதங்களில் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மு.ரவிசங்கர் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் வாடகை விவரங்களைக் கோரி மாநில தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

we-r-hiring

அறநிலையத்துறை தொடர்பாகத் தகவல் கோரி 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது ஆணையத்தில் நிலுவையில் உள்ளதாக மாநில தகவல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்குச் சொந்தமான சொத்து விவரங்கள் மற்றும் குத்தகைதாரர்களின் பட்டியலை 3 மாதங்களுக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும்.

இந்த உத்தரவைச் செயல்படுத்தியது தொடர்பான ஆவணங்களுடன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகப் பொதுத் தகவல் அதிகாரி வருகிற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் சொத்துகளின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற இந்த உத்தரவு பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘8 மாத விண்வெளி மௌனத்திற்கு முற்றுப்புள்ளி!’ – ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.-எஃப்17 ராக்கெட்!

MUST READ