Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்- துரைமுருகன்

தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்- துரைமுருகன்

-

தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்- துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சரை சந்திக்க, அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Image

டெல்லி புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வலியுறுத்தி டெல்லி செல்கிறோம். கர்நாடக அரசு அந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நமக்கான தேவையை வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசு நம் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழகத்திற்கு திறந்து விடக்கூடிய தண்ணீரின் அளவை சரியாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து டெல்லி செல்கின்றனர். துரைமுருகன் தலைமையில் எம்.பி.க்கள் குழு, மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

MUST READ