spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வர்

உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வர்

-

- Advertisement -

திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்களுடன் களப்பணி ஆற்றுவது திமுக தான், நம்முடைய முதலமைச்சர் தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வா் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரணப்பணிகள் குறித்து திமுகவினருக்கு   வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட சென்னை – தாம்பரம் – ஆவடி  ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள்,  நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், திமுக முதன்மை  செயலாளரும் நகராட்சி துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையிலும், திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் மழை நீர் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.   210 முகாம்கள் சென்னை உருவாக்கப்பட்டுள்ளது. 106 இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 4 இடங்களில் உணவு பரிமாறப்பட்டு வருகிறது. 139 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் 75 இருக்கிறது. 62 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உணவு உட்கொள்ளும் அளவிற்கு தயார் நிலையில் உணவு கூடங்கள் வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி முகாம்ங்கள் உணவு கூடங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது  என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில்  தலைமை உரை ஆற்றிய துணை முதலமைச்சர், “முதலமைச்சர் அறிவுரைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வரக்கூடிய நிலையில் அதற்காக நடைபெறுகின்ற ஒரு ஆலோசனை கூட்டம் என நினைக்க வேண்டாம், அது நிச்சயமாக இல்லை. ஒரு வெள்ளத்திற்கு முன்பும் ஒவ்வொரு பேரிடத்திற்கு முன்பு இது போன்ற பல்வேறு கூட்டங்கள்  ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். குறிப்பாக கோவிட் காலத்தில் மக்கள் உடன் நின்று இருக்கிறோம் அந்த அடிப்படையில் தான் நம் மக்கள் வாக்களித்து நம்மை ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். கோவிட் காலத்தில் நம்முடைய தலைவர் தான் முன் களப்பணியாளராக முன் நின்று இருக்கிறார். இன்று தைரியமாக பொது மக்களை சந்திக்க போகிறோம் என அனைத்து மக்கள் பிரதிநிதிகள்  சொல்லி வருகிறார்கள். அத்தனை பணிகள் இந்த அரசு மேற்கொண்டு உள்ளது. தொடர் மழையால் சில பகுதியில் மழை தேங்கி இருந்தாலும் உடனடியாக பாருங்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஏனென்றால் முதலமைச்சரிடம் இதை சென்னால் உடனடியாக இந்த பணிகள் முடிவடையும் என்ற நம்பிக்கையுடன் மக்கள்  சொல்கிறார்கள்.

மக்கள் பிரச்சினை எப்போது எங்கு இருந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் உடன் இருக்கும். இயற்கை பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி மக்களுடன் முதலமைச்சர் நிற்கிறார். நமக்கு கூடுதல் பெறுப்பு தற்போது இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு பெரிய மழையாக இருந்தாலும், புயலாக இருந்தாலும் சரி வரதா புயலாக இருந்தாலும் சரி பேரிடர் காலத்தில் திமுக முன்களப்பணியாளராக நின்று மக்களை காப்பாற்றியுள்ளோம். நிவாரண பணிகள் வழங்கப்பட்டு மக்களுடன் ஒன்று இருந்தோம் சுழன்று நம் பணி மேற்கொண்டு இருக்கிறோம்.

தற்போது சோசியல் மீடியா தொலைக்காட்சிகள் அதிகமாக உள்ளது. மக்களுக்கு பிரச்சனை இருந்தால் களத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். மழை காலத்தில் முதியோர்கள் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் அவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முகாம்கள் தயார் நிலையில் உள்ளது உணவுகள் கூடங்களில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும்  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

முகாம்ங்களுக்கு வர தயங்கும் மக்களை முகாமில் பாதுகாப்பாக தங்க  வைக்கும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது. மக்களிடம் பேசும் போது கண்ணியத்துடன் கவனத்துடனும் பேச வேண்டும்.  கவனத்துடன் மக்களை அனுக வேண்டும். திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே நேர் கோட்டில் நாம் செயல்பட்டால் தான் அரசுக்கும் திமுக விற்கும் முதலமைச்சர் பெருமை சேர்க்கும். மேயர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் போன்றவர்கள் மீட்பு மற்றும் முகாமில் முறையாக கண்காணிக்க வேண்டும். நாம் அனைவரும் களத்தில் நிற்க வேண்டும். தொடர்ந்து முதலமைச்சர் கண்காணிப்பார் ஒவ்வொருவரையும் அவர் கண்காணிப்பார்.

இந்த மழை காலத்தில் மட்டுமல்ல இனி வரும் ஒவ்வொரு நாளும் உங்களுடைய செயல்பாடுகள் மிக மிக முக்கியமாக இருக்க வேண்டும். போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.   இதுதான் திமுகவிற்கும், கருப்பு சிவப்பு கொடிக்கும், நம்முடைய தலைவருக்கும் நாம் சேர்க்கும் பெருமை. எத்தனையோ பேரிடர், பெருமழையிலா நம்முடைய மக்களை காப்பாற்றியுள்ளோம். இந்த மழை காலத்தில் மக்களுடன் நின்று அவர்களை காப்பாற்றுவோம்“ என துணை முதலமைச்சர் கூறினாா்.

டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி… விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…

MUST READ