![பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2- ஆம் தேதி தொடக்கம்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/05/engineering-counseling-1562131601-1.jpg)
தமிழகத்தின் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி வரும் செப்டம்பர் 3- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!
தமிழகம் முழுவதும் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.57 லட்சம் இடங்கள் இந்த பொறியியல் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளதாக, கடந்த ஜூலை 13- ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் 11 பொறியியல் கல்லூரிகளும் இணைந்திருப்பதால் பொறியியல் படிப்பிற்கான இடங்கள், அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
முதல் நாளிலேயே சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெறும், இந்த கலந்தாய்வில் விருப்பமுள்ள கல்லூரியை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?
இணையவழி மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்றும், www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.