

பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளின் கூட்டங்கள், பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!
பல்கலைக்கழகங்களில் நிர்வாக அமைப்புகளின் கூட்டம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், சீரான கால இடைவெளியில் நடைபெற வேண்டும் என்றும், பெரும்பாலும் இதுப்போன்ற கூட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்!
பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள் மற்றும் தேர்வாளர்கள் இல்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, சில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகப் பணிகள் முறையாக நடைபெறவில்லை. பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள், உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.