spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவர் கைது விவகாரம்: வெளியுறவு அமைச்சரை நேரில் சந்திக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

மீனவர் கைது விவகாரம்: வெளியுறவு அமைச்சரை நேரில் சந்திக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

-

- Advertisement -

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க கோரி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று நெடுந்திவு அருகே மீன்பிடித்த தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

இந்நிலையில், இலங்கைக் கடற்படை கைதுசெய்த தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் டெல்லி புறப்பட்டு சென்றார். தற்போது வரை 80 மீனவர்கள் மற்றும் 173 மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறார்.

மேலும், மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறார். மீனவர் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டுமென்றும், இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்த உள்ளார்.

MUST READ