
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது.
நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்!
இன்று (அக்.14) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 44,440- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ரூபாய் 5,555- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூபாய் 77- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!
புரட்டாசி மாதம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஐப்பசி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால், தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் நிலையில், தற்போதே தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.