Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!

ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

ஆயுதப்பூஜையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

ஆயுதப்பூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக சென்னையில் இருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும், பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!

இதேபோல், பூவிருந்தவல்லி பைபாஸில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் காரைக்குடி, கோவை, விருதுநகர், பெங்களூரு, திருவனந்தபுரம், குருவாயூருக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ