spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

-

- Advertisement -

 

"புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
File Photo

காசி, ஹரித்துவார் உள்ளிட்ட புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

அதனபடி, ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலத்தின் சார்பில் ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் காசி, கயா, ஹரித்துவார், ரிஷிகேஷ், உஜ்ஜைனி ஆகிய ஐந்து புண்ணிய தலங்களுக்கு சென்று வர சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் என்ற பெயரில் இயக்கப்படும், இந்த சுற்றுலா ரயில் மூலம் 12 நாட்களில் புண்ணிய தலங்களுக்கு சென்று வர முடியும்.

“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு கேரளாவின் கொச்சிவேலியில் இருந்து புறப்படும், இந்த சிறப்பு ரயில் நெல்லை, விருதுநகர், மதுரை, சிதம்பரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய பகுதிகள் வழியாக சென்னை எழும்பூரை வந்தடையும். பின்னர், அங்கிருந்து குஜராத் மாநிலம் பனாரஸ் வரை இயக்கப்படுகிறது.

MUST READ