இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் அவருக்குத் தனது வீரவணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தியாகம்
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாய்நாட்டின் விடுதலைக்காகவும், சுதேசிச் சிந்தனையை மக்களிடையே விதைப்பதற்காகவும் வ.உ.சி ஆற்றிய இணையற்றத் தொண்டுகளை நினைவுகூர்ந்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, “இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளில், தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்.” வெள்ளையரின் அடக்குமுறையையும் சிறைக் கொடுமைகளையும் தாங்கி, செக்கிழுத்துத் தியாகம் செய்த வ.உ.சிதம்பரனாரின் வழியில் சுதேசி உணர்வையும் உழைப்பாளர்களின் உரிமைகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என முதல்வர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
