Homeசெய்திகள்தமிழ்நாடுகடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை

கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை

-

கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா (53) என்கிற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கருத்தோவியன் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர்களது மகனின் திருமண செலவிற்காக வங்கி கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்டவற்றில் அதிகப்படியான கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு வழக்கம் போல வீட்டிற்கு வந்த கருத்துவராயன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மஞ்சுளா அதிகப்படியான நீரிழிவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களது அறை நீண்ட நேரமாக திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரியவந்தது.

Suicide

தொடர்ந்து இருவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ