spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅலட்சியமாக தடுப்பூசி செலுத்திய செவிலியர்...சிறுவனுக்கும் நேர்ந்த துயரம்!

அலட்சியமாக தடுப்பூசி செலுத்திய செவிலியர்…சிறுவனுக்கும் நேர்ந்த துயரம்!

-

- Advertisement -

 

we-r-hiring

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் லோக சந்துரு இவர் மகன் சூரியபிரகாஷ் கல்லூரி பயின்று வருகிறார். இவர் கடந்த ஜனவரி 10- ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கையில் இரும்பு கம்பி கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சூரியபிரகாஷின் தாய் அகிலா தனது மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டிடி தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

ஃபைட்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி… வெளியானது புதிய அப்டேட்…

அப்பொழுது அங்கு பணியில் இருந்த காயத்திரி என்ற செவிலியர் அவருக்கு தடுப்பு ஊசி போடும்போது சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்து உடலிலே சிக்கிக்கொண்டது. இதன் பின்பு உடைந்த ஊசியுடன் 400 மீட்டர் தொலைவு நடந்தே கூட்டிச்சென்றதால், ஊசி உள்புறம் அதிகளவு சென்று பாதிப்பு ஏற்பட்டு வலியில் கதறி உள்ளார். பின்பு ஸ்கேன் செய்து பார்த்தபோது உடலில் ஊசி சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தனது கணவரிடம் தெரிவிக்கவே சந்துரு உடனடியாக அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் தனது மகன் பின்னம் பகுதியில் இருந்த ஊசி அகற்றப்பட்டது.

இது சம்பந்தமாக சந்துரு கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவனின் பெற்றோர், தடுப்பூசியைச் செலுத்த தெரியாமல் பணி செய்ததால் ஊசி உடைந்து சிக்கி கொண்டது. உடனடியாக அந்த மருத்துவமனையின் மருத்துவரை அழைத்து நடந்தது தொடர்பாக எழுதி கொடுக்குமாறு கேட்டு, அதன்பின் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து 3 மணி நேர அறுவைசிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதாக கூறினார்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து புதிய பாடலுக்கு வரவேற்பு

சம்பவம் தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரனை மேற்கொண்ட ஆய்வாளரிடம் மருத்துவமனை நிர்வாகம் செய்த தவறை ஒப்புக்கொண்ட நிலையில், காவல்துறை சார்பாக எந்த நடவடிக்கையும் மருத்துவமனையின் மீது எடுக்காததாலும், மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அதன் பேரில் ஆணையர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

MUST READ