Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில் விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு. விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. சந்திரயான்3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது நமக்கு பெருமை. ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள். உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது. விருப்பு, வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள் தமிழர்கள்.

MKstalin

இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற விஞ்ஞானிகள் 9 பேருக்கும் அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். உழைப்புக்கான அங்கீகாரமாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதுநிலை பொறியியல் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் செலவையும் அரசே ஏற்கும். இந்த நாட்டில் தாமஸ் ஆல்வா எடிசன் ஐன்ஸ்டீன் ஏன் உருவாகவில்லை என அப்போது அண்ணா கேட்டார். அதனால் அவர் பெயரிலான அரங்கில் விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது,” என்றார்.

MUST READ