spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் சுமார் 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இராமேஸ்வரம், நாகை மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், மீனவர்களை கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மீன்வளத்துறையினர் அறிவித்துள்ள தடையை மீறி குமரி கடல் பகுதிகளில் இரவு நேரங்களில் கர்நாடக மாநில மீனவர்கள் மீன்பிடிப்பதாக மீனவளத்துறைக்கு அப்பகுதி மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

இதனையடுத்து குளச்சல், தேங்காய்ப்பட்டினம், கொல்லம் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்,  மீனவளத்துறை உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 350க்கும் மேற்பட்ட, விசைப்படகுகளைச் சேர்ந்த 5,000 மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

MUST READ