Homeசெய்திகள்தமிழ்நாடு'லியோ' 4 மணி காட்சிக்கு அனுமதிக் கோரி மனு!

‘லியோ’ 4 மணி காட்சிக்கு அனுமதிக் கோரி மனு!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

‘லியோ’ திரைப்படத்திற்கு காலை 04.00 மணி ரசிகர்கள் காட்சிக்காக அனுமதியளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில். ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், “காலை 09.00 மணி பதிலாக காலை 07.00 மணிக்கே திரையிடவும் அனுமதிக்க வேண்டும். லியோ திரைப்படத்தை அதிகாலை 04.00 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைவு!

இந்த முறையீட்டு மனு, இன்று (அக்.16) மதியம் 01.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

MUST READ