Homeசெய்திகள்தமிழ்நாடுபாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர்!

பாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர்!

-

 

பாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர்!
Video Crop Image

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் ஜோடியை பெற்றோர் பிரித்ததால், காதலன் தற்கொலைச் செய்துக் கொண்டார்.

“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள புதுப்பேர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞர், அருகில் இருக்கும் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சஞ்சய்-யும் அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொண்டு, வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே சஞ்சய்யை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சஞ்சய்-யையும், அந்த பெண்ணையையும் கண்டுபிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இது சிறார் திருமணம் என்றும், சட்டப்படி செல்லாது என்றும் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், இருவரையும் தனித்தனியாக பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

காதலியைப் பிரிந்த சோகத்தில் இருந்த சஞ்சய், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலை அவசர அவசரமாக உறவினர்கள், தகனம் செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் காவல்துறையினர், பாதி எரிந்த நிலையில், சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ